ஞாயிறு, ஜனவரி 09, 2022

துன்பக்கேணி

 சுரந்துகொண்டேயிருக்கும் துன்பக்கேணி

தாம்புக்கயிற்றை
சரசரவென்று விட்டு இழுத்து இறைத்துக்கொண்டால்
வலிக்கவில்லை என்று பாவனையா

***************************************************
நீ சுட்டுவிரலில் மாட்டிச் சுழற்றிக்கொண்டேயிருக்கும்
ஒற்றைச்சாவி
வாகனம் ஓடும்போது
எத்தனை பெருமூச்சு விடும்
எனக்கும் தெரியும்
***********************************************
பதியன் போட உடைத்தாலும்
பக்குவம் பார்க்கச் சொல்லும் உனக்கு
விதையோ பூவோ பிஞ்சோ
எது கருகுமென்றே கவனிக்காமல்
சட்டென மருந்தடிப்பதில் தயக்கமேயில்லை
ஒற்றை அருகம்புல் சிரித்துக்கொண்டுதான் பார்க்கிறது
பச்சைப்பைகளையே நகர்த்திக்கொண்டிருக்கும்
உன் கண்ணில் படுவதில்லை அவ்வளவே
************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...