ஞாயிறு, ஜனவரி 09, 2022

மீண்டும் பள்ளிக்கு

 டைமன் கல்கண்டில் எண்ணி

அஞ்சோ ஆறோதான் நைவேத்தியம்

அதில் ஆளுக்கொன்றாய் பிரிவினை
நூறுகிராம் மிளகுகாராசேவோ
மணிக்காராபூந்தியோ
சரிபங்கு வைத்தால் போதுமாயிருந்தது
பெருமாள் கோயிலில்
அத்தனை குட்டி உருண்டைகளாய்ச்
சீடை உருட்டிய மாதுவின்
பின்னாலேயே போய் வாங்கிக்கொண்ட
இரண்டிரண்டில்
என்ன ருசி
நிறைய வைத்த நிறைவுக்காகவே பந்திகளுக்கு வாங்கப்பட்டன கலர் பூந்திகள்
பட்டை சாக்லேட்டுகள் கடித்து உதட்டோரம் வழிய
வழியத்தின்பவர்களைப் பார்த்து
வியக்குமுன்
எவனோ
மாத்திரைப் பட்டையைத் திணித்துவிட்டான்
ஒரே ஒரு ஆரஞ்சு மிட்டாய் போதும்
யாராவது பள்ளிக்கூடத்துக்கு
அழைத்துப் போங்களேன்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...