வியாழன், ஜனவரி 13, 2022

சுழியத்தைக் கேள்வி கேட்கும் நீலப்புள்ளி

 ஏதோ சொல்ல வந்தாய்

சொன்னாய்
ஆனால் முழுமையாக சொல்லப்பட்டதா
முழுமையாக கவனிக்கப்பட்டதா
இருவருக்குமே தெரியவில்லை
பின் எப்போதோ ஒருகணத்தில்
சொன்னேனே என்பாய்
சொல்லப்படாத சொற்கள் என்னவாயின
பால்யத்தில்
இதழ்க்கடையிலோ
உதடுகளிலோ
ஒட்டிக்கொண்டிருக்கும் கொஞ்சூண்டு தித்திப்பை
நா நீட்டி இழுத்து
சப்புக்கொட்டியதுபோல மென்றுவிட்டாயா

******************************************
மொத்த வீட்டின் இருளுக்கும்
சவால் விடுக்கிறது ஒற்றை நீலப்புள்ளி
சுழியத்தைப்பருகி
சுழியத்தைக் கேள்வி கேட்கும் நீலப்புள்ளி
இந்த வேம்பு இங்குதான் இருக்கிறது
அட குயிலே
நீ ஏன் இந்த கிடுகிடு நிசப்த இரவில்
எசப்பாட்டு பாடி எனக்குத் துணையிருக்கக்கூடாது
காலையில்தான்
வெளிச்சத்தின் பின்னணியில்
சேர்ந்திசை பாடுவாயா
நீ குக்கூ என்றால்
குக்கர் உஷ் என்கிறது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...