ஞாயிறு, ஜனவரி 09, 2022

உறையைப் பிரித்தால் அவ்வளவுதான்

 நிறைய சந்தேகம் வந்துவிடுகிறது ஒவ்வொருவருக்கும்

ஏன் காத்திருக்கிறோம்
ஏன் புன்னகைக்கிறோம்
ஏன் மறுதலிக்காமல்
தலையசைக்கிறோம்
முதலில் அவரவர்
அவரவர் தேநீரைக்
கொதிக்க விடுங்கள்
***************************************
முன்னர் நடந்தவற்றை நீ சரியாக நிறைவு செய்யவில்லை
மீண்டும் அப்படியே திரும்பத்தரவா
என்ற கேள்வியை
கணிணிக்குச்
சொல்லிக்கொடுத்தவனை விட
வாழ்வை யார் புரிந்துகொண்டார்

*********************************************
உறையைப் பிரித்துக் கொட்டியதும்
உறைந்திருந்த பட்டாணி துண்டாக
உடைந்து
உருள்கிறது
இதம் முடிந்துவிட்டது தெரியாத ஆசுவாசத்தோடு

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...