ஞாயிறு, ஜனவரி 09, 2022

கருவறையில் தங்கிய மிச்சம்

     கால் வைக்க முடியாதபடி கொழகொழத்துக்கிடக்கும்

பாதையை எப்படியோ தாண்டிவிடுகிறேன்

ஒருநாள்தானே
நாளை உலர்ந்துவிடும் என்ற
நினைவின் கைபிடித்தபடி
*************************************************
பிணைத்து வைத்தே பழக்கமான கால்கள்
அறுந்த
சங்கிலியை உதறப்பார்க்கின்றன
அனிச்சையாய்

***********************************
புதிய தருணங்கள்
என்று நம்பிதான்
கதவைத்திறந்து தலையசைத்து
அகலப் புன்னகையுடன் வரவேற்றாய்
அதில் வீசிய துர்வாடை
புறப்பட்டுவந்த கருவறையில் தங்கிய மிச்சம்
கண்டுபிடித்துவிட்டாய்
எனச் சொல்ல முடியாதபோது
அத்தனை உலர்ந்த புன்னகைக்குள்தான்
மூக்கைப் பிடித்துக்கொண்டு
ஒளிய வேண்டியிருக்கிறது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...