வியாழன், ஜனவரி 13, 2022

அரூபப் பெருக்கு

 எங்கள் தெருவோர வாய்க்காலின் குட்டி மீன்

கோரைகளுக்குள் புகுந்து புகுந்து துள்ளி ஓடும்
நெடுங்காலத்துக்குப்
பின்
குளியலறைக் குவளைக்குள்ளும்
அதே துள்ளல்
பாசிவாடை வர
வாளியின் பச்சை நிறம் போதுமாயிருந்தது
வாட்சப் வழி
பார்த்த பெரியப்பாவின்
பொக்கை வாய் வழிதான்
அந்த வாய்க்கால் பெருகி வந்திருக்க வேண்டும்
தலைமுறைக் காலம் கடந்தும்
உயிர்வாழும் மீன்
ஒரே தாவு தாவியிருக்கும்
கால இயந்திரத்தில்
************************************************
எப்பொழுதாவது
ஒருமுறை
அழைப்பாள் அவள்
அவளுக்குப் பொழுது போகாத பொழுது
என்று நினைத்துக் கொள்வேன்
பிடித்தவற்றை அறிவிக்கவும்
பிடிக்காதவற்றைப்
பகடி செய்யவும்
தீர்மானங்களைப் பட்டியலிடவும்
இப்படி ஒரு பொழுது இருக்கிறதே உனக்கு என்பதை
மனதுக்குள்ளும்
ம் களை உரக்கவும் சொல்லும்போது
ஒரு தட்டு கத்தி
மாதுளை எடுத்து நீட்டிவிடு
உதிர்த்துவிடலாம்
ஒன்றாக

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...