வியாழன், ஜனவரி 13, 2022

துண்டு துண்டான பக்கம்

 நீ கேட்டாய் என்று

வழியில்
அடையாளமாகப்
போட்டுவைக்க
என்
வாழ்வின் ஒரு பக்கத்தைத்
துண்டு துண்டாகக்
கிழித்து
ஒன்றும் பறந்துவிடாமல் அமுக்கிஅமுக்கி
உன்கையில் கொடுத்து அனுப்பினேன்
அடைந்ததும்
அழைத்துவிட மாட்டாயா என்று காத்திருக்கிறேன்
உன் பாதை என்ன
அத்தனை நீளமாகவா போகிறது
*****************************************************
பிரயாசை என்ன புதிதா
யார்தான் படவில்லை
என்னைப்போல் இல்லை
என்பது மட்டுமல்ல
எனக்கல்ல
என்பதும்தானே
உங்கள் மற்றும் என் சிக்கல்
************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...