தானே தன்னைப்பற்றி நம்பிக்கை வார்த்தை சொல்ல வேண்டியிருக்கும் தருணம் அவலமடா என்றேன்
முழு சகதி
அந்த அரைச்செங்கல்லில் நிற்கப் பார்க்கிறேன்
உனக்கு அதுவும் பொறுக்கவில்லையா என்கிறான்
******************************************************
கசம் கசம்
கீழே போடு
என்று விரட்டும் அம்மாவைப் பார்த்தபடியே
எக்காளச்சிரிப்போடு தத்தித்தத்தி நடந்து
பிடுங்கி எறிந்த குப்பையை எடுத்து
வாயில் வைத்துக்கொள்ளும்
குழந்தையாகத்தான் செய்கிறது மனது
********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக