மழை வரி வரியாக விழுந்து
கலைத்துக் கொண்டிருக்கிறது
**""""""
மழையினூடாக
யாரையோ அடையாளம் கண்டுகொண்ட
யாரோ
உரக்க அழைக்கிறார்கள்
உதிர் இலைகளோடு
அதையும் சேர்த்து அடித்துப்போகிறது காற்று
******"""
என்ன எல்லோரும்
வீட்டுக்குள் அடைந்தாயிற்றா?
சரிபார்த்தபின்
பெய்கிறது அம்மாமழை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக