சனி, பிப்ரவரி 05, 2022

ஆடிக்கென்று பிரத்யேக சித்திரம்

 

மழை வரி வரியாக விழுந்து
கலைத்துக் கொண்டிருக்கிறது
**""""""
மழையினூடாக
யாரையோ அடையாளம் கண்டுகொண்ட
யாரோ
உரக்க அழைக்கிறார்கள்
உதிர் இலைகளோடு
அதையும் சேர்த்து அடித்துப்போகிறது காற்று
******"""
என்ன எல்லோரும்
வீட்டுக்குள் அடைந்தாயிற்றா?
சரிபார்த்தபின்
பெய்கிறது அம்மாமழை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...