அத்தனை வெறுப்பு பொங்கும் மனசோடு எப்படி ஒரு புன்னகை என்றேன்
வேம்பின் பூங்கொத்து
அத்தனை அழகில்லையா எனப்
பேச்சை மாற்றுகிறாய்
*********************************************************
கைவிடுவதற்கென்று
ஒன்றும் இல்லாத
இடத்திலிருந்து பெயர்ந்தபோதும்
நினைவைச்
சுரண்டும் வெறுமை
மனசாட்சி சனியனிடம்
எதையும் கேட்டு வைக்க வேண்டாம்
உருண்டு புரண்டு சிரித்து வைக்கும்
அப்புறம் அது துப்பிய எச்சிலை
அவசரமாகத் துடைத்துக்கொண்டு
அசட்டுச்சிரிப்பு வேறு சிரிப்பீர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக