சனி, பிப்ரவரி 05, 2022

நான் என்ன செய்வேன் என் தேவனே

 என்றைக்காவது

தற்கொலை செய்து கொள்வேன் என்றாள் அவள்

எப்போது என்றோ எப்படி என்றோ
தெரியாத ஒன்றை சர்வநிச்சயமாக நிகழப்போகும் பாவனையில்
சொல்லும் அவளை வெறித்துப் பார்த்தேன்
ஆனால் அதற்கு சற்றுமுன்
ஹரிபிரசாத் சௌராஸியாவைக்
கேட்டபடி
இரண்டு பாஸந்தி சாப்பிடுவேன்
என்கிறாள்
என்றாவது எதுவும் நிகழ்ந்துவிட்டால்
இந்த வரிசையில்
நடந்ததா என்று சரிபார்க்க வேண்டுமா
அல்லது
இதுகூட நிறைவேறாமற் போய்விட்டாயே
என்று அஞ்சலி எழுத வேண்டுமா
இப்படித்தான் யாராவது
புதிய கவலைகளை ஏற்றி வைத்து விடுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...