சனி, பிப்ரவரி 05, 2022

இப்படியாகத்தானே


எங்கள் பூசல் நிறைவுற்றது என்று
மயிலிறகு சொற்களால்
வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் இருவர்
கம்பிக்கதவுக்கு வெளியே
உற்றுநோக்கியபடி இருக்கும் காகம்
க்கா என்று குரல் கொடுத்துப் பார்க்கிறது
மயிலிறகுச் சொற்கள்
தலைதிருப்பி ஒரு மந்தகாசப் புன்னகை வீசி அமர
ஆஹா, திரிபுரசுந்தரி
ரௌத்திரத்தை
இப்படி ஒரு உருண்டைச் சோறாக்கிக்
கொடுத்து விடேன் எனக்கும்
அந்தக் காகத்துக்கும்
நாலு பருக்கை போட்டுப் பசியாறிக் கொள்கிறேன்
இரையாத மனசு
இரந்தபடி நாட்கள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...