குளம் பருகுகிறது
சூரியனை
கரையோரப் புங்கையை,கிளுவையை
குறுக்கே பறக்கும் காகத்தை
மீண்டுவந்த சந்திரனை....
பாசிப்பச்சைக்குள்ளிருந்து
தலைநீட்டிய அல்லிக்குதான்
ஒருநாளே தாளவில்லை
*************************************
உனக்காகத்தான்
உனக்காகத்தான்
என்கிறாய்
என் மனசோ அனிச்சையாய் நீ கிள்ளும்
குரோட்டன் இலைகளோடு
நுணுங்கி நுணுங்கி விழுகிறது
**************************************
இத்தனை இருளுக்கு
ஒற்றைப்பொட்டு மினுக்கம் போதுமென்றிருந்தது
மினுக்கம் வந்தவுடன்
சற்றே தூண்டிவிட மாட்டோமா என்றிருக்கிறது
காலத்தின் திரியோ அரூபம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக