சனி, பிப்ரவரி 05, 2022

எங்கிருக்கிறாய்

 

சுவடே தெரியவில்லையே
கேட்குமுன்
உன் தேடலுக்கும் மறதிக்கும் நடுவிருக்கும்
சிறுபள்ளம் பார்த்தாயா
நினைத்ததற்கும்
தவிர்த்ததற்கும்
நடுவில் ஒரு
ஒட்டுத்துண்டு இருக்கிறதே
அங்காவது பார்த்திருக்கலாம்
பிரியமாய்
ஒட்டிக்கொண்டதற்கும்
மறந்தாற்போல எடுத்துவிட்டதற்கும் இடையே
ஒரு காலேஅரைக்காற்புள்ளிதான்
அங்கு பார்த்திருக்கலாம்
எல்லாம் விட்டு
எனக்கே தெரியாத கேள்வியை
கத்தரிக்காயின் பாவாடை போல
நறுக்கி விசிறுகிறாய்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...