சனி, பிப்ரவரி 05, 2022

திறந்திடு சீசேம்

 காக்கா கொத்திவிடாமல் கறுப்புத்துணி விரித்துத் தானியம் துழாவிவிட்டுத்

தனியாக ஓரிடத்தில் குருணை வைக்கத் தெரிகிறது
மிச்சத்தை வழித்துத் தெருநாய்க்குப் போடும்
ஜீவகாருண்யப் பந்தியைச் சரியாக
நாலுவீடு தள்ளி நடத்துகிறாய்
யாரென்று அடையாளம் தெரிந்தபின்னரே
புன்னகை செலவழிக்கிறாய்
இந்தப் பாடங்களெல்லாம்
நடத்தியபோது
நான் விடுப்பா என்ன

********************************************

ஒரு சிட்டிகை நம்பிக்கையை வைத்துக்கொண்டு
தினந்தோறும் தினந்தோறும் ஆக்கி அவித்து முடிக்கிறாய்
புதிதாய் கூடுதலாய்
இன்னுமொரு சிட்டிகையாவது கிடைத்திடாதா
என்ற ஏக்கத்தோடு
நீ திறக்கும் ஜாடிகள்
உனக்கு முன்னால் குரல் கொடுக்கின்றன
திறந்திடு சீசேம்
இங்கு இருப்பு இல்லை என்பதை
இப்படியும் சொல்லலாமோ




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...