புதன், பிப்ரவரி 20, 2013
செவ்வாய், பிப்ரவரி 19, 2013
வன தேவதா
பழுத்த இலைகளில்
பாதம்புதைய நடந்துகொண்டிருக்கிறேன் ..
இருள் கவிந்த வனத்தில்
என்றோ கவிந்ததன் எச்சமான
ஒளியின் சாயலில்
நடக்கிறேன்...
செவியுரசும் விழுது ...
வண்ணமோ வடிவமோ
வாழிடமோ காட்டாது
மணத்தால்
உடன் நடந்த பூ..
உணர்ந்தறியாக் குளிர்மையோடு
கால் நனைத்த நீர்ப் பெருக்கு,
தக்க உதாரணங்களோடு
சேகரித்தபடியே நடக்கிறேன்......
மழையுதிரும் மாலையிலோ,
நிலா வழியும் இராமணலிலோ
நாம் நடக்கையில்
கதைக்கத் தோதாக இருக்குமென...
ஒருவேளை.....
ஒளியின் தடம் தீண்டாமலே
என் பயணம் முடியவும் கூடும் ..
நெடுக அழைத்தபடி
நீ வரும் நாளில்
இந்தப் பழுப்புகள்
சருகாய் மொடமொடத்தால்
அதன் வழியே
நீ கேட்கலாம் என் சேகரங்களை......
என் சிறகில் ஒளியிருந்ததைச்
சொல்லி அழாதே தயவுசெய்து ....!
திங்கள், பிப்ரவரி 18, 2013
அபி உலகம் -13
"தோஸ் கலர் டெஸ் (ரோஸ் கலர் டிரஸ் )
போடும் பள்ளிக்கு மட்டுமே போவேன் "
அபியின் தீர்மானத்தை
அரும்பாடுபட்டு இடம் பிடித்த
பள்ளி நிர்வாகத்திடம்
சொல்வது எப்படி...
*********************
தோழிB.தர்ஷினி
"B"பிரிவில் சேர்ந்துவிட்டாள்
"R" அபி மட்டும்
ஏன் "C" பிரிவுக்குப் போகவேண்டும்
அபி அப்பாவுக்கு
Cயில் தொடங்கும் பெயர்
தேடிக் கொண்டிருக்கிறாள்
பிரிவு மாற்றுவதைவிட
பெயர் மாற்றுவது சுலபமாம்
***********************
அபி அப்பாவின் தற்போதைய கவலைகள் .....
செவ்வாய், பிப்ரவரி 12, 2013
சனி, பிப்ரவரி 09, 2013
திங்கள், பிப்ரவரி 04, 2013
ஞாயிறு, பிப்ரவரி 03, 2013
அபி உலகம் -12
அபியின் புதிய
அணிகலன்
வழக்கம்போல
பொம்மைப்பெண் காதில்,....
பதறிய அம்மா
"உலகமே தெரியலியேடி உனக்கு..
எனக் கலங்க ,
ஓடிப் போய்
தாத்தாவின் புதுக் கண்ணாடியோடு
வந்தாள் அபி.
"இதப் போட்டுக்கறேம்மா
இனிமே செரியாயிடும் ......
*********************
தொண தொணவென பேசியபடி
சுற்றிக் கொண்டிருந்தாள் அபி.
"நானே கவலையா
இருக்கேன்...தெரியுதா உனக்கு ?
சும்மா இரு...."
...............
இருநொடிக்குப்பின்
"கவலைன்னா என்னம்மா...?
சும்மா இருந்துவிட்டாள்
அம்மா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மயில் நீலச்சேலை. டிசைனர் ரவிக்கை, பொருத்தமாய்த்தேடிவாங்கிய அணிகலன்கள் , செருகிய பூச்சரமும் ஒப்பனைப்பூச்சுகளும் ... பொருத்தம...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...






