செவ்வாய், மார்ச் 31, 2015
கவிழ்ந்திருக்கும்…
பார்த்த கணத்திலிருந்து
என் அடிவயிற்றைப் பிசைகிறது
அந்தப்படம்
என் அடிவயிற்றைப் பிசைகிறது
அந்தப்படம்
அழுது வடியும்
விளக்குக் கம்பம் ஒன்றின்கீழ்
தலைகவிழ்ந்து
அமர்ந்திருக்கிறாள் அச்சிறுமி
விளக்குக் கம்பம் ஒன்றின்கீழ்
தலைகவிழ்ந்து
அமர்ந்திருக்கிறாள் அச்சிறுமி
பசியில் குறுகியோ
சீண்டலில் சாம்பியோ
தனிமையில் வெம்பியோ
அங்கே அமர்ந்திருப்பதாக
விளக்கம் தராதீர்கள்
சீண்டலில் சாம்பியோ
தனிமையில் வெம்பியோ
அங்கே அமர்ந்திருப்பதாக
விளக்கம் தராதீர்கள்
தயவு செய்து
உங்கள் படத்தை
சற்றே திருத்துங்கள்
அந்த விளக்குக் கம்பத்திற்கு
சற்றுத் தள்ளி
அரையிருளில்
பாத்திரம் தேய்க்கும் ஒரு அம்மா
இல்லை
நீர் சுமக்கும் அக்கா
வெறுமையாய்ப் பார்க்கும் அப்பா
பண்டம் கவர்ந்த தம்பி
அட
எதுவும் வேண்டாம்
ஒரு சோகைப் பூனையோ,நாயோ
கூடப்போதும்
உங்கள் படத்தை
சற்றே திருத்துங்கள்
அந்த விளக்குக் கம்பத்திற்கு
சற்றுத் தள்ளி
அரையிருளில்
பாத்திரம் தேய்க்கும் ஒரு அம்மா
இல்லை
நீர் சுமக்கும் அக்கா
வெறுமையாய்ப் பார்க்கும் அப்பா
பண்டம் கவர்ந்த தம்பி
அட
எதுவும் வேண்டாம்
ஒரு சோகைப் பூனையோ,நாயோ
கூடப்போதும்
கோபத்திலோ பிடிவாதத்திலோ
கவிழ்ந்த அவள் தலை
எல்லாம் மறந்து
புன்னகையுடன் நிமிரும் காட்சியை
நானே கற்பனை செய்து உறங்கிவிடுவேன் -மார்ச் 27 20015 வல்லமை
கவிழ்ந்த அவள் தலை
எல்லாம் மறந்து
புன்னகையுடன் நிமிரும் காட்சியை
நானே கற்பனை செய்து உறங்கிவிடுவேன் -மார்ச் 27 20015 வல்லமை
திங்கள், மார்ச் 16, 2015
தெப்பக்கட்டை
தெப்பம் சுற்றிவந்து கொண்டிருந்தது
ஒரு பஞ்சுமிட்டாயோடு
திருப்தி அடையாச் சிறுவர்களின் .,
பார்த்தே நிறைந்த கடைகளைப்
பிரியப்போகும் சிறுமியரின்.,
வழமையான குழப்பங்களைத் துறந்த
நாட்கள் முடிகிறதே என
தீபாவளிச் சேலையால்
முகம் துடைத்தபடி நகரும் பெண்டுகளின்
மனமே
தன் தெப்பக்கட்டை
என பூச்சரம் ஆட ஆட
...............................................
தெப்பத்தில் அம்பிகையும்
சற்றே கண் கலங்கினாற்போலத்தான் .....
ஒரு பஞ்சுமிட்டாயோடு
திருப்தி அடையாச் சிறுவர்களின் .,
பார்த்தே நிறைந்த கடைகளைப்
பிரியப்போகும் சிறுமியரின்.,
வழமையான குழப்பங்களைத் துறந்த
நாட்கள் முடிகிறதே என
தீபாவளிச் சேலையால்
முகம் துடைத்தபடி நகரும் பெண்டுகளின்
மனமே
தன் தெப்பக்கட்டை
என பூச்சரம் ஆட ஆட
...............................................
தெப்பத்தில் அம்பிகையும்
சற்றே கண் கலங்கினாற்போலத்தான் .....
ஞாயிறு, மார்ச் 01, 2015
நகரு அல்லது நகரவிடு
நிழல் எனக்குப் பிடிக்கவில்லை
தேவையாகவும் இல்லை
நிழலில் நின்றால்
எனக்குப் பாதுகாப்பு
என நீ நினைக்கலாம்
நிழல்
என்னைப் பத்திரமாக
உன்னிடம் தரும் எனக்கூட நினைக்கலாம்.
போதும்
நிழலில் இருந்தது.
நகரு அல்லது நகரவிடு
வெயிலின் ருசி அறிய வேண்டும்
வெயிலில் இலைகள் மினுங்குவதை,
காய்கள் கனியத் தொடங்குவதை
சற்றே சுடுவதை,
கதிர் முற்றுவதை
வெயிலில் இருந்து பார்க்கிறேன்
வெயிலைப்பற்றி
நீ அச்சுறுத்தியதெல்லாம் நிஜமாகவே இருக்கட்டும்
திங்கள், பிப்ரவரி 23, 2015
சமீபத்திய கவிதைகள் -2
அந்தக் குறுவாள்
உன்னுடையதா...
என்னுடையதா....
*********************************
இந்த நொடிமட்டும்தான்
கைவசம் என்றேன்
அதற்கும்
கைநீளும் என்பதறியாமல்
***************************************
அந்த வீதியின்
மகிழம்பூக்கள்
நினைவில் காய்ந்து கொண்டு....
நடத்தல் சாத்தியமில்லை
*********************************
நான் கேட்டதும்
நீ கேட்டதும்
ஒரே பாடல் என்றாலும்
ஒரே பாடல் இல்லை*
*****************************************
வீடு பூட்டும் கவலை
ஏதுமின்றி
தேர் ஏறிவிட்ட சுவாமி
காத்திருக்கிறார்
*****************************
இக்கணத்தின் கைப்பு
மறக்க
அக்கணம் வேண்டியிருக்கிறது
அக்கணமும்
கைப்பு தளும்பியது
இக்கணம் உறைக்கவில்லை.
இக்கணமும் அக்கணம் ஆகலாம்
உன்னுடையதா...
என்னுடையதா....
*********************************
இந்த நொடிமட்டும்தான்
கைவசம் என்றேன்
அதற்கும்
கைநீளும் என்பதறியாமல்
***************************************
அந்த வீதியின்
மகிழம்பூக்கள்
நினைவில் காய்ந்து கொண்டு....
நடத்தல் சாத்தியமில்லை
*********************************
நான் கேட்டதும்
நீ கேட்டதும்
ஒரே பாடல் என்றாலும்
ஒரே பாடல் இல்லை*
*****************************************
வீடு பூட்டும் கவலை
ஏதுமின்றி
தேர் ஏறிவிட்ட சுவாமி
காத்திருக்கிறார்
*****************************
இக்கணத்தின் கைப்பு
மறக்க
அக்கணம் வேண்டியிருக்கிறது
அக்கணமும்
கைப்பு தளும்பியது
இக்கணம் உறைக்கவில்லை.
இக்கணமும் அக்கணம் ஆகலாம்
சமீபத்திய கவிதைகள் சில
-- என்னைத் தாண்டிய
எறும்பு
நிழலையும் ....
நான் ?
எறும்பு
நிழலையும் ....
நான் ?
############################## ###
ஒரு குரோதம்
ஒரு புன்னகை
ஒரு விரக்தி
ஒரு ஏக்கம்
................
............
ரயில் பெட்டி போல்
யார் இவற்றைக்
கோர்த்தது
தடதடத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு புன்னகை
ஒரு விரக்தி
ஒரு ஏக்கம்
................
............
ரயில் பெட்டி போல்
யார் இவற்றைக்
கோர்த்தது
தடதடத்துக் கொண்டிருக்கிறேன்
############################## #######
அச்சச்சோ
சொல்வாய் எனத்தான் நினைத்தேன்
வேர் இருக்குமென்றே
நினைத்ததில்லை என்கிறாய்
சுருட்டி விசிறிய லாவகம்தான்
மளுக்கென கண் உடைக்கிறது
சொல்வாய் எனத்தான் நினைத்தேன்
வேர் இருக்குமென்றே
நினைத்ததில்லை என்கிறாய்
சுருட்டி விசிறிய லாவகம்தான்
மளுக்கென கண் உடைக்கிறது
############################## ###########
வலியை உற்றுநோக்குவதுபோல்
கொண்டாட்டத்தை
உற்று நோக்கத் தோன்றியதில்லை
நீயும் சொன்னதில்லை
முழுநிலவுக்கும்
சற்றே படபடப்பு இருக்கும்போல
நாளைமுதல்
கொஞ்சமேனும் ஒளித்துக்கொள்ள
வேண்டியிருக்கே என...
கொண்டாட்டத்தை
உற்று நோக்கத் தோன்றியதில்லை
நீயும் சொன்னதில்லை
முழுநிலவுக்கும்
சற்றே படபடப்பு இருக்கும்போல
நாளைமுதல்
கொஞ்சமேனும் ஒளித்துக்கொள்ள
வேண்டியிருக்கே என...
##############################
வரலாறு முக்கியம்தான்
தையல் பிரிந்த
ஆடை பற்றியே அவதானிக்காது
சற்றே திரும்பிப்பார் வரலாற்றை
வந்துசேரும் ஊசிநூல்
ஆடையோடு நிற்காவிட்டால் என்ன
தைக்கப்பட்ட உதடுகளோடும்
வரலாற்றைத்
திரும்பிப்பார்க்க முடியும்
தையல் பிரிந்த
ஆடை பற்றியே அவதானிக்காது
சற்றே திரும்பிப்பார் வரலாற்றை
வந்துசேரும் ஊசிநூல்
ஆடையோடு நிற்காவிட்டால் என்ன
தைக்கப்பட்ட உதடுகளோடும்
வரலாற்றைத்
திரும்பிப்பார்க்க முடியும்
படம் ;ராஜி சுவாமிநாதன்
வெள்ளி, டிசம்பர் 19, 2014
உமா மோகன் கவிதைகள்-அதீதம்
1 கேளாமனம்
ஆசைதான்
எல்லோருக்காகவும் பிரார்த்திக்க
கைஎன்னவோ
வழிநடையில் சுவர் தாண்டி
நீட்டிக்கொண்டிருக்கும் செம்பருத்தியை
வீட்டு மாடத்தில் பூசிக்கப்
பறிக்கிறது
2 விலங்கு
ஒரு கேவல்
எழும்பி
வெடித்தால்தான்
என்ன
3 படைப்பாளி
கவிதை எழுதி நீண்ட காலமானது
ஆரஞ்சு நிறத்தில் காரட்
சிறுவேர்சூழ் சிவப்புமுள்ளங்கி
ஓடடைந்த புளி
உருண்டு உதிரும் நெல்லி
மணக்கும் பசிய மல்லி
கழுவி ஆய்ந்து அடுக்கி ..
இதன் ஒரு கீற்றையும்
படைக்க இயலா வெறுமையுடன்
இன்றும் ஏடு மூடவேண்டியதுதான்
***
டிசம்பர் இரண்டாம் இதழ் 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மயில் நீலச்சேலை. டிசைனர் ரவிக்கை, பொருத்தமாய்த்தேடிவாங்கிய அணிகலன்கள் , செருகிய பூச்சரமும் ஒப்பனைப்பூச்சுகளும் ... பொருத்தம...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...






