செவ்வாய், அக்டோபர் 04, 2016

ரீவைண்ட்

யாரோ சொன்னதையே 
எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பவர்க்கும்
யார் சொன்னதையும்
எப்போதும் கேளாதவர்க்கும்
இடையில் நின்று 
சொல்வது கேட்பதற்கான கோடழிந்த பெருவாழ்வு
வாழிய நிலனே

*****************************************
நினைவுகளை சேமித்துவைக்க
ஆன்திஸ் டே ஆப் இருக்கிறது
சுமந்தலையத் தேவையில்லை
மருகியதையும்
மறைத்ததையும் கூட
ஆதார் எண் கொண்டு அகழ்ந்தெடுத்து தருவார்கள்
பகிரங்கமாக்குவது குறித்து
பரிசீலிக்கும் வாய்ப்பு
இன்னும் உங்களிடமே இருப்பதே
பாக்யம்
இறுக்கமான முகத்தோடு
துக்கம், வருத்தம் சுமந்தபடியான
பாவங்களோடு
சிரித்தாலே இனிக்கும்

ரீவைண்ட்
ஓட்டிக்கொள்ளுங்கள் அதுவரை

*****************************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...