செவ்வாய், அக்டோபர் 04, 2016

கடவுளும் நானும்

ஏனோ பாரமாக இருக்கிறது என்றேன்
உரக்கச் சொல்லிவிட்டேன்
போலிருக்கிறது
இருவேளை மட்டும் சாப்பிடலாம்
என்று ஒருவரும்
உலர்பழம் தாவரம் மட்டும் உண்ணு 

என்று இன்னொருவரும்
உண்ணாதிரு இல்லையேல்
எதையும் எண்ணாதிரு என்று
மாறி மாறி எவரேனும்
சொல்லத் தொடங்கியிருந்தனர்
அந்த எல்லாருமே
நீயாகவோ நானாகவோ மட்டும்
முகம் கொண்டிருந்தது
தாள முடியாமல்
இந்த முகத்தை மாற்றக்கூடாதா
என்று முறையிட்டேன் கடவுளிடம்
மனுதாரரின் கையொப்பம் போல
எனக்கு முகம்
இந்த முகம் வேண்டுகையில்
இந்த முகம்தான் பெறும்
என்கிறார்
நான் கேட்பதென்ன நீங்கள்
சொல்வதென்ன எனக் கடிந்தேன்
அவரோ
கடவுள் என்பதை மறந்தவர் முகமெல்லாம் 

மாற்றுவதற்கில்லை என்று உறுமுகிறார்
நானென்ன பெட்ரோமாக்ஸ் லைட் கேட்டேனா
நீங்கள்தான் ஆல்இன்ஆல் அழகுராஜாவா 

என்று கேட்டு முடித்தபோது
பாரம் குறைந்துவிட்டிருந்தது.
இதுதான் ஆயிரத்தெட்டு
கவுண்டமணியாய நம
எழுதிய கதை



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...