செவ்வாய், அக்டோபர் 04, 2016

கிரீடங்களோடு பிச்சைப்பாத்திரம்

எளியவளாக இருக்காதே என எச்சரிக்கிறார்கள்
ஒரு கிரீடத்தை மறைவிடத்திலிருந்து
உங்களுக்கு மட்டும் தெரியும்படி 
காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்
நாடகத்தின் வசனம் மறந்த
குழந்தையின் திகைப்புடன் நீங்கள் 

என்ன என வினவுவதை
தலையிலடித்தவாறு
நகர்ந்துநின்று பல்லைக்கடிக்கிறார்கள்
உடைவாளுக்கு
பழம்புளி போட்டுத் தேய்த்தாயிற்றா
என்பதைக் களத்தில் உங்கள்
கரம் உயரும்போது
பிடித்தவாறு கண்கசியக் கேட்கிறார்கள்
நீங்களும்
இதைவிட அக்கறை எவர் காட்டமுடியுமென
பிச்சைப்பாத்திரத்தைக் கழுவித்
தயாராகிறீர்கள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...