செவ்வாய், அக்டோபர் 04, 2016

பழைய நம்பிக்கை

நிறையப் பேசவேண்டியிருப்பதில்லை
எதையும் கேட்கவேண்டியிருப்பதில்லை
இன்னும் நம்பிக்கையோடு
நடக்க முடிகிறது
ஏதோ ஒரு சந்து முனையில்
வீட்டின் பழைய நாற்காலியை எடுத்து வைத்து
காந்திக்கும் காமராஜருக்கும்
படத்தின் அளவில்

 பாதி உயரமேயான சாமந்தி மாலை
சார்த்திவிட்டு 

வேலையைப் பார்க்கப் 
போய்விடுபவர்கள் இருக்கும் தெருவில்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...