வெள்ளி, அக்டோபர் 14, 2016

சொல்லித்தந்த சரஸ்வதி

பாதிவிலையில் வாங்கிய 
பழைய பாடப்புத்தகத்தில் 
ஏற்கனவே வைத்த பொட்டிலிருந்து 
தள்ளிவிடாத கச்சிதத்தோடு 
மஞ்சள்குங்குமம் வைக்கவும்
புதுவாசனை ஆசையை 
நோட்டோடு நிறுத்திக்கொள்ளவும்
சொல்லித்தந்திருந்தாள் சரஸ்வதி

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...