ஞாயிறு, அக்டோபர் 16, 2016

இருந்த காலம்

நாய்திங்குமா அந்த வரிக்கியை 
என்று வாய்சொன்னாலும் 
ஒரு காய்ச்சலுக்கு 
ஏங்கிய காலங்கள் இருந்தன
நடந்தே கடத்தல் இயல்பானபோதும் 
பாட்டு பாடியபடி தினமும் கடக்கும்
டவுன் பஸ்ஸுல 
ஒருநா ஏறிட மாட்டமா 
என்று ஏங்கிய காலங்கள்
இருந்தன
பிளஷர் கார் வாசலுக்கு வரவென்றே் 
சாவோ வாழ்வோ 
நெருங்கிவிட வேண்டும் 
என ஏங்கிய காலங்கள் இருந்தன.
வருவார்க்கொன்று ஈதலின்

புகழ்பாடியபடி
பழையது பிழிந்து உறிஞ்சிய 

காலங்கள் இருந்தன
இதையெல்லாம் கூட 

சொல்லிக்கிடக்கப்போகிறோம் 
என்று அறியாத காலங்கள் இருந்தன.

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...