வெள்ளி, அக்டோபர் 14, 2016

இலக்கு நோக்கி

திடீரென்று அந்த வசவு
உங்கள் காதில் விழுகிறது
யாரோ யாரையோ
என்று நினைத்திருக்கிறீர்கள்
தேயும் பருவத்தில்தான்
அந்தப்பேரொலியின் இலக்கு
நீங்கள் என்பதே புரிகிறது.
உங்கள் குழப்பம் லேசானதாகத்
தொடங்கி வலுத்து
தலையில் இடித்துக்கொண்டிருக்கையில்
யாரோ அந்த யாரிடமோ
ஏன் எதற்கு எனக்கேட்ட சப்தம் வருகிறது
தலைக்குள் இடித்த
உரலையெல்லாம் இழுத்து நிறுத்திவிட்டு
விடைவரும்
அந்த மைக்ரோ நொடிக்காக
கவனத்துடன் நிற்கிறீர்கள்
ஆவேசத்தையெல்லாம்
கழுவிவிட்டு
மதகிலிருந்து குதிக்கும் சிறுவனின் வேகத்தில் 
ஒரு சிரிப்பு 
வசவொலியே மேலானதாக..

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...