வியாழன், மே 20, 2021

நவம்பர் 19

 உடன் நடக்கும் உயிர்காத்தல் கடமையென வாழ்பவன்

தன் உண்டி,தன் குடி,தன் புகையென ஒடுங்குதல் அறியாதவன்
முத்தங்களை ருசித்த அதே இயல்பில்
தைலத்தைத் தேய்ப்பவன்
தலைநிற்காப்பிள்ளையும் ஏந்திக்கொண்டு துணிமாற்றத் தெரிந்தவன்
அம்மையை,சோதரியை,
இணையை,தோழியை
எவர்முன்னும் இளக்காரம் பேசாதவன்
ஆடை விலகிடும் தற்செயல் தருணங்களிலும்
கண்பார்த்துக் கதைக்க முடிபவன்
தன்னை முந்திச்செல்லும் வாகனக்காரியை
ஏகவசனத்தில் இரையாதவன்
உங்களையெல்லாம்
வாழ்த்தாது
யாருக்கு வாழ்த்து சொல்லப் போகிறேன் *சர்வதேச ஆண்கள் தினம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...