வியாழன், மே 27, 2021

உருகாத நஞ்சு

 காதருகே மணியளவு மரு'தான்

கீதாக்காவை அடையாளம் காட்டியது
கூடைப்பந்து பயிற்சிக்களத்தில்
டீச்சரின் செல்லப்பெண்ணாக
எங்களையெல்லாம் சட்டெனக் குட்டும்
அதிகாரம் கொண்டிருந்த கீதாக்கா
மணியாகிவிட்டால்
உச்சந்தலையை ரணமாக்கிய
கீதாக்கா
இடுப்பில் குழந்தையோடும்
தலையில் கட்டோடும் அழுதபடி நிற்கிறாள்
மருவெல்லாம் இல்லாதமுகம் எத்தனைவசதி
யாரோ ஒரு காவலராக விசாரிக்க முடியும்
**************************************************
இன்னும் தோயாத தயிர்போல
உயிர்ப்பற்று தளும்பும் புன்னகையோடு வாசல் திறக்காதே
நிச்சயமின்மை
என்பது நஞ்சு
கருணையாக அதை உருக்கிக்கொள்ள விதிக்காதே
அதைவிட
யாருமற்ற பாவனையில் அந்தக்கதவு திறக்காமலே கிடக்கட்டும்
**************************************************
போதும் என்ற சொல்லை வெயிலும் கேட்பதில்லை
மழையும் கேட்பதில்லை
நீயும் கேட்பதில்லை
அதற்காகச்
சொல்லாமலிருக்க முடியுமா
*******************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...