வெள்ளி, மே 14, 2021

பால்யத்தின் பசை

    யாரென்றே தெரியாத ஒருவன்

என் வீட்டு வாசலில்
சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறான்
தலைக்கேறிய கோபத்தோடு கொஞ்சவா போகிறேன்
யாரடா நாயே என்றேன்
எங்கிருந்தோ ஓடிவந்து
இருவரையும் மாறிமாறிப் பார்க்கிறது தெருநாய்
நகரச்சொல்லும் அவமானம்
தொண்டைக்குள் புரள்கிறது ****************************************



வார மாத இதழ்களின் பக்கங்களுக்குள்
சப்பாத்தியைத் தேய்த்து வைப்பாள் அம்மா
எங்கள் பால்யங்களைப்போலவே
ஒட்டாமல் வரும்
இப்போது
ஒட்டவே வாய்ப்பில்லை
இடவும் சுடவுமாக இரு என்று எச்சரிக்கிறார்கள்
அச்சில் ஈயம் இருக்குமாமே
உங்கள் பால்யமும் இப்படித்தானே

*************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...