வெள்ளி, மே 14, 2021

அரிசி

 சற்றே வெளுத்து

கொஞ்சம் பொருக்கு உதிரத்தொடங்கியிருந்த சுவரில் சாய்ந்து கொண்டாள்

அலைந்து இழுத்த தலைமுடியைக் கொத்தாய்த்தூக்கிச் செருகிக்கொண்டபிறகு
ஒரு இடைஞ்சலும் கிடையாதென்றுதான்
தோன்றியது
நீட்டிய காலை ஆசுவாசமாய் மடக்கி நீட்டிக்கொண்டாள்
கல் பொறுக்க எடுத்துவந்த அரிசியிலிருந்து
ஒருபிடி அள்ளிப்போட்டு
மெல்லலானாள்
ஏட்டீ கல்யாணத்துல மழை வந்துரும்டீ எப்போதும் கூவும்
ஆத்தா பார்த்தால்
இனி என்ன சொல்வாள்
மழை வந்துதான் கலியாணத்தைக் கெடுக்கணுமாக்கும் **************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...