வியாழன், மே 27, 2021

மழை ஆடை பட்டாம்பூச்சி

      கண்கட்டி அழைத்துப்போகும் பாதை தெரிவதற்காக

ஒரு கதையில் கூழாங்கற்களை
இட்டுப்போகிறான்
இன்னொன்றில் சுள்ளிகளை
இட்டுப்போகிறான்
ஏதாவதொன்று வேண்டியிருக்கிறது
நமக்கும்
மறுபடி வரப்போகிறோமா
எனத்தெரியாத பாதைக்கும் **************************************
இளஞ்சிவப்பு பூக்கள் இறைந்த
மழைஆடைக்குள்ளிருந்து
சிணுங்குகிறாள் பாப்புக்குட்டி
அண்ணனின் மழை ஆடைமேல் மட்டும்
ஒரு பட்டாம்பூச்சி

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...