வியாழன், மே 27, 2021

கடவுளின் குட்டிக்கரணம்

 தன்னியல்பில்

உள்முற்றத்தில் கால்நீட்டிக்கொண்டு

தூத்தல் ' வலுக்கும்வரை
உட்கார முடியும்
ஆளிருக்கும் வேளைகளில்
அதற்குமேல்
என்றால்
மறந்தாற்போல
குடையை விட்டுக் கிளம்பு
******************************************
கிழக்கிருந்து சற்றே சாய்வாக
விழும் தாரைகளின் ஊடே
மின்கம்பியைப்பற்றிக்கொண்டு
ஒரு குட்டிக்கரணமிட்டுவிட்டு
சர்ரென சகதிக்குள் இறங்குகிறான் கடவுள்
கதவடிக்குள் நின்றிருக்கும் எனைப்பார்த்து அவன்
கையசைக்கும் தருணம்
ஒன்றும் புரியாமல் "பார்த்து பத்திரம்" என்கிறேன் ******************************************
காணாமற்போனதாக
நினைத்திருந்த
ஒரு சிறுபெட்டி
இன்று கையில் தட்டுப்பட்டது
அலமாரியில் இவ்வளவு ஆழமான ஓரம் இருந்திருக்கிறதா
திறக்காமலே மீண்டும் அங்கேயே அதை
வைத்துவிடலாம்
சின்னச்சின்னதாக
எதெதுவோ
அதற்குள் இருக்கிறது என்றும்
எல்லாமாகக்
காணவில்லை என்றும் நினைத்திருந்தேன்
அதில் ஒன்று இல்லையென்றாலும்
வேறு எங்கு போனதென்று யோசிக்க வேண்டாம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...