வியாழன், மே 20, 2021

தைக்கா முள்

 உண்மை பேச

முடிவு செய்தபின்தான் தெரிகிறது

அவிழ்த்தெறிய முடியாத
பொய்யின் கதகதப்பு
****************************************
நம் இருவர் உள்ளங்கையிலும்
இருக்கிறது முள்
ரத்தம் வராதபடி
கைகுலுக்குவதில்
எவ்வளவு
தேறிவிட்டோம்
புகைப்படமோ
புன்னகையால்
ததும்புகிறது
*************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...