வியாழன், மே 27, 2021

நேடிவ்

 ஒருநாள்

ஒரே ஒருநாள்
விட்டுவிட்டுப் போனால்
முகத்தைத் திருப்பிக் கொள்கிறது வீடு
நேடிவ் போயிருந்தேங்க
அலைபேசியில் சொல்லிக்கொண்டே நடக்கும்போது
தலையில் நிலை இடித்தாற் போலிருந்தது
சொன்னவுடன்
சொல்கிறாள் தோழி
நீ பாட்டுக்கு ஊர்வீடு போல
நாமதான் குனியாம வந்துட்டோம்னு நினைக்காதே
எனக்கென்ன குறைச்சல்
கறிவேப்பிலைக்கொத்தேன்னு
நிலைதான் இறங்கிக்குட்டியிருக்கும்
இப்போது நானென்ன செய்ய
நம்புவதா
இன்னொரு முறை
"நேடிவ்ல ...."
சொல்லிப் பரீட்சிப்பதா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...