வெள்ளி, செப்டம்பர் 06, 2019

கதைகளில் வந்த கானகம்

எங்கள் தெருவுக்கும்
பின்னாடி தெருவுக்கும் நடுவே
இருந்த கருவைத் தோப்புதான்
வடைதிருடும் நரி
கிணற்றில் விழும் சிங்கம்
விருந்துக்குப்போகும் குரங்கு
ஓநாயை ஏமாற்றும் கரடி
எல்லாம் வாழும் வனமென்று நம்பிக்கொண்டிருந்தோம்
பீக்காடாய்க் கிடந்த கருவைக் காட்டுக்குள் முள் குத்தாமல்
ஓரங்களிலேயே ஒதுங்கிவிட்டு
வரவைக்க
கருவைக்காடென்றே
சொல்லிவைத்த அம்மா கட்டிய கதை அது
கழித்துக்கட்டிய கருவைமண்ணில்
புதிய
தெருவே எழும்பி நிற்க
அறைக்குள் கழிப்பறை
அனைவர் வீட்டிலும்
தொலைக்காட்சி கார்ட்டூன்களில் நரி,
பரி,
சிங்கம்,கரடி எல்லாவற்றோடும் சிரித்து கதைபேசி
நூடுல்ஸ் விழுங்கும் பிள்ளைகள் தட்டிலிருந்து
ஆயாவுக்கு ஒரு வாய்
அம்மாவுக்கு ஒரு வாய்



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...