செவ்வாய், அக்டோபர் 23, 2018

அறியவும் கூடும்



யாருமிலாப்பொழுதின் ஒற்றை முக்காலி காப்போன்
பண்பலை துணையில்
பயத்தையோ தனிமையையோ விரட்ட முற்படுகிறான்

தூசிவரா குளிரினுள் அமர்ந்து
கண்துடைத்தபடி
ஆத்தங்கர மரமே வை ஒலி கூட்டுவதைப்பார்த்தால்
ஆச்சர்யம் வரலாம் உங்களுக்கு

 விட்டுவந்த
ஆற்றங்கரையும்
கிள்ளிப்போட்ட அரசமர இலையும்
தள்ளிநின்று தள்ளியே போன துணையும் 
விழித்துரும்பானதை
அறியமாட்டீர்களல்லவா 

அறியவும் கூடும்
"ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற 
நேரத்திலே 
வீற்றிருந்த மணற்பரப்பு" கேட்டு 
மௌனம் போர்த்திக் கொள்பவர்கள்-

ஆகஸ்ட் 6 காமதேனு இதழ் -
                             

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...