செவ்வாய், ஜூலை 13, 2021

துளிர்ப்பு

 


ஒரு விம்மலோடுதான்

வரவேற்றிருக்க வேண்டும்
ஆனால்
சின்னப்புன்னகை நெளிந்தது
தன்னை மீறிய வேகத்தில்
எழுந்து நிற்கிறாள்

இவ்வளவுக்குப் பிறகும்
அரிசிப்பையும்
வெல்லம் முந்திரிப் பொட்டலங்களுமாக
வந்துநிற்கும் மைத்துனன்
சுவரில் சார்த்திய கரும்பினால்
தன்னையே நாலு போட்டது போல
நெளிகிறான்
மறுவீடு போனபோது முறுக்கிவந்த மாப்பிள்ளை

என்ன பேசுவதென்று
வந்தவரும் நின்றவரும் திக்கிக் கொண்டிருக்கையில்
ஐ...கரும்பு எனத்தூக்கும்
அண்டைவீட்டுச் சிறுவன்
உடைக்கிறான
பனிப்பாளத்தை

தன்வீட்டு ரேஷன் அட்டையிலிருந்து 
தன்பெயரை அழிக்கும் வல்லமை  
சுடுசொல்லுக்கு இல்லையென்றானதில்
பொங்குகிறது அவள் கண்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...