திங்கள், ஏப்ரல் 13, 2015
சனி, ஏப்ரல் 04, 2015
4 4 15-முகநூலில்
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை...தளைகளைத் தளர்த்திக் கொள்வது...
******************************************************
ஒரு புன்னகையால்
உயிர்ப்பிக்கலாம்
ஒரு புன்னகையால்
கொல்லலாம்
புன்னகையால் மட்டுமல்ல....
*****************************************************
சொல்
எல்லாம்
சொல்லிவிடுமா
*****************************************************
நம்பிக் கொண்டே
நடக்கிறோம் ...ப்போம்
எங்களுக்குத் தெரிய வேண்டாம்
வேறெதுவும்
***************************************************
துயரங்களின்
பின்வாசல் மட்டும்
தெரிந்தால் போதும்
**************************************************
******************************************************
ஒரு புன்னகையால்
உயிர்ப்பிக்கலாம்
ஒரு புன்னகையால்
கொல்லலாம்
புன்னகையால் மட்டுமல்ல....
*****************************************************
சொல்
எல்லாம்
சொல்லிவிடுமா
*****************************************************
நம்பிக் கொண்டே
நடக்கிறோம் ...ப்போம்
எங்களுக்குத் தெரிய வேண்டாம்
வேறெதுவும்
***************************************************
துயரங்களின்
பின்வாசல் மட்டும்
தெரிந்தால் போதும்
**************************************************
தேடிக் கொண்டிருந்தது
உண்மைதான்
உண்மைதான்
இந்தப் பல்லி ஒலிக்காமல்
போய்த் தொலைந்திருக்கலாம்
போய்த் தொலைந்திருக்கலாம்
***************************************************
நீளும் வரிசை
முடிவதை நினைத்தால்தான்
அச்சம்
தொடக்கத்திற்குப் போய்விடவா...
முடிவதை நினைத்தால்தான்
அச்சம்
தொடக்கத்திற்குப் போய்விடவா...
******************************************************
யாராவது சொல்லுங்கள்
எல்லாம் பொய் என்று
யாராவது சொல்லுங்கள்
எல்லாம் முடிந்தது என்று
யாராவது சொல்லுங்கள்
எதுவும் நடக்கவில்லை என்று
யாராவது சொல்லுங்கள்
எதுவும் சொல்ல வேண்டாமென்று
எல்லாம் பொய் என்று
யாராவது சொல்லுங்கள்
எல்லாம் முடிந்தது என்று
யாராவது சொல்லுங்கள்
எதுவும் நடக்கவில்லை என்று
யாராவது சொல்லுங்கள்
எதுவும் சொல்ல வேண்டாமென்று
***********************************************************
திறப்பாய்
என்று காத்திருக்கையில்
இன்னொரு பூட்டு
என்று காத்திருக்கையில்
இன்னொரு பூட்டு
*********************************************************
விட்டுவிடலாம்தான்
விட்டால்
விட்டால்
*****************************************************
இருப்பு
இருப்பது மட்டுமன்று
இருப்பது மட்டுமன்று
********************************************************
ரத்தத்தைவிட
அடர்த்தியான கண்ணீரையும்
வழித்தெறிகிறது
அதே விரல்
துடைத்தெறிகிறது
அதே கைக்குட்டை
அடர்த்தியான கண்ணீரையும்
வழித்தெறிகிறது
அதே விரல்
துடைத்தெறிகிறது
அதே கைக்குட்டை
காய்ந்துவிடும் எப்போதும்போல்
********************************************************
4 4 15-முகநூலில்
செவ்வாய், மார்ச் 31, 2015
கவிழ்ந்திருக்கும்…
பார்த்த கணத்திலிருந்து
என் அடிவயிற்றைப் பிசைகிறது
அந்தப்படம்
என் அடிவயிற்றைப் பிசைகிறது
அந்தப்படம்
அழுது வடியும்
விளக்குக் கம்பம் ஒன்றின்கீழ்
தலைகவிழ்ந்து
அமர்ந்திருக்கிறாள் அச்சிறுமி
விளக்குக் கம்பம் ஒன்றின்கீழ்
தலைகவிழ்ந்து
அமர்ந்திருக்கிறாள் அச்சிறுமி
பசியில் குறுகியோ
சீண்டலில் சாம்பியோ
தனிமையில் வெம்பியோ
அங்கே அமர்ந்திருப்பதாக
விளக்கம் தராதீர்கள்
சீண்டலில் சாம்பியோ
தனிமையில் வெம்பியோ
அங்கே அமர்ந்திருப்பதாக
விளக்கம் தராதீர்கள்
தயவு செய்து
உங்கள் படத்தை
சற்றே திருத்துங்கள்
அந்த விளக்குக் கம்பத்திற்கு
சற்றுத் தள்ளி
அரையிருளில்
பாத்திரம் தேய்க்கும் ஒரு அம்மா
இல்லை
நீர் சுமக்கும் அக்கா
வெறுமையாய்ப் பார்க்கும் அப்பா
பண்டம் கவர்ந்த தம்பி
அட
எதுவும் வேண்டாம்
ஒரு சோகைப் பூனையோ,நாயோ
கூடப்போதும்
உங்கள் படத்தை
சற்றே திருத்துங்கள்
அந்த விளக்குக் கம்பத்திற்கு
சற்றுத் தள்ளி
அரையிருளில்
பாத்திரம் தேய்க்கும் ஒரு அம்மா
இல்லை
நீர் சுமக்கும் அக்கா
வெறுமையாய்ப் பார்க்கும் அப்பா
பண்டம் கவர்ந்த தம்பி
அட
எதுவும் வேண்டாம்
ஒரு சோகைப் பூனையோ,நாயோ
கூடப்போதும்
கோபத்திலோ பிடிவாதத்திலோ
கவிழ்ந்த அவள் தலை
எல்லாம் மறந்து
புன்னகையுடன் நிமிரும் காட்சியை
நானே கற்பனை செய்து உறங்கிவிடுவேன் -மார்ச் 27 20015 வல்லமை
கவிழ்ந்த அவள் தலை
எல்லாம் மறந்து
புன்னகையுடன் நிமிரும் காட்சியை
நானே கற்பனை செய்து உறங்கிவிடுவேன் -மார்ச் 27 20015 வல்லமை
திங்கள், மார்ச் 16, 2015
தெப்பக்கட்டை
தெப்பம் சுற்றிவந்து கொண்டிருந்தது
ஒரு பஞ்சுமிட்டாயோடு
திருப்தி அடையாச் சிறுவர்களின் .,
பார்த்தே நிறைந்த கடைகளைப்
பிரியப்போகும் சிறுமியரின்.,
வழமையான குழப்பங்களைத் துறந்த
நாட்கள் முடிகிறதே என
தீபாவளிச் சேலையால்
முகம் துடைத்தபடி நகரும் பெண்டுகளின்
மனமே
தன் தெப்பக்கட்டை
என பூச்சரம் ஆட ஆட
...............................................
தெப்பத்தில் அம்பிகையும்
சற்றே கண் கலங்கினாற்போலத்தான் .....
ஒரு பஞ்சுமிட்டாயோடு
திருப்தி அடையாச் சிறுவர்களின் .,
பார்த்தே நிறைந்த கடைகளைப்
பிரியப்போகும் சிறுமியரின்.,
வழமையான குழப்பங்களைத் துறந்த
நாட்கள் முடிகிறதே என
தீபாவளிச் சேலையால்
முகம் துடைத்தபடி நகரும் பெண்டுகளின்
மனமே
தன் தெப்பக்கட்டை
என பூச்சரம் ஆட ஆட
...............................................
தெப்பத்தில் அம்பிகையும்
சற்றே கண் கலங்கினாற்போலத்தான் .....
ஞாயிறு, மார்ச் 01, 2015
நகரு அல்லது நகரவிடு
நிழல் எனக்குப் பிடிக்கவில்லை
தேவையாகவும் இல்லை
நிழலில் நின்றால்
எனக்குப் பாதுகாப்பு
என நீ நினைக்கலாம்
நிழல்
என்னைப் பத்திரமாக
உன்னிடம் தரும் எனக்கூட நினைக்கலாம்.
போதும்
நிழலில் இருந்தது.
நகரு அல்லது நகரவிடு
வெயிலின் ருசி அறிய வேண்டும்
வெயிலில் இலைகள் மினுங்குவதை,
காய்கள் கனியத் தொடங்குவதை
சற்றே சுடுவதை,
கதிர் முற்றுவதை
வெயிலில் இருந்து பார்க்கிறேன்
வெயிலைப்பற்றி
நீ அச்சுறுத்தியதெல்லாம் நிஜமாகவே இருக்கட்டும்
திங்கள், பிப்ரவரி 23, 2015
சமீபத்திய கவிதைகள் -2
அந்தக் குறுவாள்
உன்னுடையதா...
என்னுடையதா....
*********************************
இந்த நொடிமட்டும்தான்
கைவசம் என்றேன்
அதற்கும்
கைநீளும் என்பதறியாமல்
***************************************
அந்த வீதியின்
மகிழம்பூக்கள்
நினைவில் காய்ந்து கொண்டு....
நடத்தல் சாத்தியமில்லை
*********************************
நான் கேட்டதும்
நீ கேட்டதும்
ஒரே பாடல் என்றாலும்
ஒரே பாடல் இல்லை*
*****************************************
வீடு பூட்டும் கவலை
ஏதுமின்றி
தேர் ஏறிவிட்ட சுவாமி
காத்திருக்கிறார்
*****************************
இக்கணத்தின் கைப்பு
மறக்க
அக்கணம் வேண்டியிருக்கிறது
அக்கணமும்
கைப்பு தளும்பியது
இக்கணம் உறைக்கவில்லை.
இக்கணமும் அக்கணம் ஆகலாம்
உன்னுடையதா...
என்னுடையதா....
*********************************
இந்த நொடிமட்டும்தான்
கைவசம் என்றேன்
அதற்கும்
கைநீளும் என்பதறியாமல்
***************************************
அந்த வீதியின்
மகிழம்பூக்கள்
நினைவில் காய்ந்து கொண்டு....
நடத்தல் சாத்தியமில்லை
*********************************
நான் கேட்டதும்
நீ கேட்டதும்
ஒரே பாடல் என்றாலும்
ஒரே பாடல் இல்லை*
*****************************************
வீடு பூட்டும் கவலை
ஏதுமின்றி
தேர் ஏறிவிட்ட சுவாமி
காத்திருக்கிறார்
*****************************
இக்கணத்தின் கைப்பு
மறக்க
அக்கணம் வேண்டியிருக்கிறது
அக்கணமும்
கைப்பு தளும்பியது
இக்கணம் உறைக்கவில்லை.
இக்கணமும் அக்கணம் ஆகலாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மயில் நீலச்சேலை. டிசைனர் ரவிக்கை, பொருத்தமாய்த்தேடிவாங்கிய அணிகலன்கள் , செருகிய பூச்சரமும் ஒப்பனைப்பூச்சுகளும் ... பொருத்தம...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...





