ஞாயிறு, அக்டோபர் 10, 2021

பெருவாழ்வே

 நறநறவென

குழல்விளக்குகளைக் கடித்துத் தின்பவனைப் பார்த்து வியந்தபோது
ஒரு வளையத்தில்
காலும்
இன்னொரு வளையத்தில் கையுமாகத் தாவிய
பார் விளையாட்டுப் பெண்ணை அண்ணாந்து பார்த்தபோது
பெட்டிக்குள் பெண்ணையனுப்பி
முயலை வரவழைத்தவனுக்காகக் கை தட்டியபோது
அறியவில்லை
அத்தனையும்
செய்வேனென்று
கண்ணீர்த் துளியத்தனையும்
இருளில் முகவரிதவறி
நிலவு சொட்டிய
பனித்துளி
என நான் சொல்லவும்
நீங்கள் நம்பவும்...

என் பெருவாழ்வே....

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...