திங்கள், அக்டோபர் 25, 2021

மாவிளக்கின் உப்பு

 பிரகாரத்தின் வெம்மை கருதி

குவிந்த பாதங்களுடன் தாவித்தாவிப் போகிறாள் அவள்
சுற்று எண்ணிக்கை தவறிவிடப் போகிறதே என மூலஸ்தானத்திலிருந்து வெளியில் வந்து எண்ணிக்கொண்டிருக்கிறாள் அங்காளி
********************************************************
என் வனங்களை எனக்குத் திருப்பிக்
கொடுங்கள்
இன்னும் எத்தனைகாலம் என்ற
அம்பை வீசியெறிந்துவிடும்
கிரீடங்களின் கண்ணில் படாது
ஒரு மிடறு நீரருந்த
என் குட்டைகளை விட்டு விடுங்கள்
உங்கள் காட்சியகங்களில் பத்திரப்படுத்த
சிறகுகளைப் பிடுங்க வருமுன்
அமர்ந்துகொள்ள வேண்டும்
ஒரு
தழைத்த மரம் ***************************************
பூக்கும்பம் சுமந்தபடி சீவனற்ற நடையில்
அவள் போகிறாள்
எப்படியும் அங்காளி
தன் மாவிளக்கின்
உப்புக்காவது பதில் சொல்லிவிடுவாள்
என்ற நம்பிக்கையுடன்
கொட்டு முழக்கு கூட்டத்தின் நடுவே இறங்கிப்போய்
அவள் சுமக்கமாட்டாது சுமக்கும் கும்பத்தையாவது
வாங்கிக்கொண்டுவிடலாமா என யோசிக்கிறாள்
பத்தடி உயர மின்விளக்கு அலங்காரத்தில் நிற்கும் அங்காளி





கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...