திங்கள், அக்டோபர் 25, 2021

அரளிக்கொரு பரிவுப்பார்வை

 எப்படியோ தினம் அது நடக்கிறது

பச்சையில் ஏன் துருப்பிடிக்கிறது என நந்தியாவட்டையிடம் விசாரித்தபடி
வாசல் இரும்புக்கதவின் கொக்கியை
நான்
அகற்றும்போது
மிகச்சரியாக
அடுத்த வீட்டின் இருசக்கரவாகனம்
உருண்டு இறங்கும்
சறுக்குப்பாதையின் முடிவில் நிலைநிறுத்தியதும்
வண்டியோட்டுதலின்
ஒரு பகுதி போல
அரளியிலை ஒன்றைக் கிள்ளியபடி காத்திருப்பான்
கதவைப் பூட்டும்
இணைக்காக
ஏன் இதைச் செய்கிறாய்
என்று கேட்கத்துடிக்கும் நாவைச்சுருட்டி உள்திணித்து
ஓடும்
ஆயிரம் தருணங்களில் இதுவுமொன்றாகி விடுகிறது.
என்னால் முடிந்தது
அரளிக்கொரு பரிவுப்பார்வை
அவ்வளவே
**************************************************
பாதுகாப்பான இடத்தில் நின்றபடி
பார்த்து ரசிக்கிறவர்களிடம்
கோபித்துக்கொண்டு போகிறது
கடல்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...