திங்கள், அக்டோபர் 25, 2021

அந்தர முடிச்சுகள்

 கைப்பிடிகளை

ரசிக்கிறாய்
பின் அதிசயம் போல
இன்னும் இதெல்லாம் இருக்கிறதா என்கிறாய்
உண்மையிலேயே
உருவி எடுத்த குறுவாளிலிருந்து சொட்டும் ரத்தம்
உன் கண்ணில் படாதபடி
எது மறைக்கிறது...
செய்வினை எடுக்கலாம் வா என்கிறாளே இவள்
நிசந்தானா *************************************
மரணக்கிணறு தாண்டும்
மோட்டார் சைக்கிளுக்கும்
கொல்லைக் கிணற்றடியில் துருத்தி நிற்கும்
சவலை வாழைக்குமான
முடிச்சுகளை
அந்தரத்தில்
வெகு வேகமாகப் போட்டுக்கொண்டே போகிறான்
அந்த வேலையற்றவன்
இந்தா ரெண்டு கிடுகு சொருகிவிடு
என்று சிபாரிசோடு
பின் ஓடுகிறீர்கள்
வள்ளல் பெருமக்களே
புண்ணியக் கவலை உங்களது


*******************************************
சிறுநாணச் சிரிப்போடு
அவன் தரும் கரும்புச்சாறு குவளையைப்
பெற்றுக் கொள்கிறாள்
நிறநிறமாய்க் கண்ணாடிவளை நிரம்பிய கைக்காரி
அடுத்த வாடிக்கையாளருக்கென
இஞ்சித்துண்டைத் தள்ளியபடி
இவள் நாணத்தை ருசித்துக் கொள்கிறாள் கடைக்காரி
குவளை நிரம்பும் அவகாசம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...