சனி, அக்டோபர் 30, 2021

நூல் இற்றுப்போன மணிமாலை

 துடியான தெய்வங்களைப் பின்மாலை இருளிலோ

நள்ளிரவு கடந்துமோ

வழிபட்டுக் கிடக்குமொரு மரபில்

படிகள்தோறும் ஏறி இறங்குகின்றன கால்கள்
யாருக்கும் இல்லாத வெட்கம் எனக்கென்ன
கிறீச்சிடுகின்றன கதவுகள்
கறை நல்லதாம்
பத்து ரூபாய் போதுமாமே
மிச்சமெல்லாம் வரவுதான்
***********************************
சற்றே பெரிய சட்டையாய் வாங்கிவைக்கும்
நினைவிலேயே
சன்னல் திரை தைத்தாயா அம்மா
போதாமையை எதிர்கொள்ள கைநிறைய யோசனைகளை வைத்திருந்திருக்கிறாய்
நூல் இற்றுப்போன மணிமாலையாக
உன் வாழ்வு
நெடுக சிதறிக்கிடந்தன
சொத்து என சொல்லிக் கொள்வாரின்றி
******************************************************
ஒரு குரல்வழிச் செய்தி வந்ததாக
அலைபேசி சொல்கிறது
சற்றே தாமதமாக
திறக்குமுன் யாவர்க்குமாக நீக்கப்பட்டதென
அதே அலைபேசி சொல்கிறது
அதைப்போலவே
எல்லாம்
தகவலெனக் கடந்துவிட முடியாத மனம்
நள்ளிரவிலும் தட்டியெழுப்புகிறது
என்னவா இருக்கும்




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...