சனி, அக்டோபர் 30, 2021

இந்தபூமி விற்பனைக்கல்ல

 பள்ளியைவிட்டு வெளியே வந்தவுடன்

தின்பண்டக்கடைகள்
தெருமுனைதோறும்
குட்டியானைகள்
வெங்காயமோ
பூண்டோ
செவ்வாழையோ
மரவள்ளியோ
வைத்துக்கொண்டு
சிலேட்டுகளில் எழுதிய விலைநிலவரத்தோடு
மருத்துவமனைகளின் வாசலில்
பழைய பாட்டில்கள்
துண்டுகள்
கேன் டீ
இடியாப்பக் கூடைகள்
வீடு திரும்பு
வீடு திரும்பு
என்று
கூவுகின்றன
இன்ன பிற கீரைக்கட்டுகள்
பீங்கான் சாடிகள்
மல்லிகைச்சரங்கள்
இதையெல்லாம்
வாங்கிக்கொண்டு எங்கேதான் போக
வாங்காமல்
எங்கே போக

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...