திங்கள், அக்டோபர் 25, 2021

உன் மலர்ச்சாடியில் என் வானம்

 அது பிளம்சா திராட்சையா என்ற சந்தேகம்

தின்னும்வரை இருந்தது

இப்படி ஏதாவது ஒரு கட்டம் உன்னை உணர்ந்துகொள்ள வழியிருக்கா *********************************************
காரை பெயர்ந்த சிமிண்டுத் திண்ணையில்
ஈரத்தோடே வரைந்துவைத்த
தாயக்கட்டத்தின் மேல்
சாக்பீசால் கோடு போட்டுவிட்டுத்
தயாராக இருப்பாள் பொன்னு அத்தை
தோற்றுப்போகத் தயாராக இருந்தும்
கூடவர
ஆளற்றுப்போன
காலத்துக்குப்பின்
இருபக்கத்துக்காகவும்
தாயக்கட்டை உருட்டும் லாவகம்
கற்றாள்
சிமிண்டுத்திண்ணை தகர்த்து
அறையாக மூடிக்கொண்டபின்
அவள் அறைக்குள்
தாயக்கட்டை
பழைய பெட்டிக்குள்
***********************************************
விரிய விரியத் திறந்துகிடந்த என்வீட்டு வானம்
உன்வீட்டு வரவேற்பறை மலர்ச்சாடிக்குள் ஒடுங்கி அமர்ந்திருப்பதாக சத்தியம் செய்கிறாய்
அது எப்படி
என்னால் முடியும் என்று வேறு சிரிக்கிறாய்
பதிலுக்கு
சிரிப்பதா சண்டையிடுவதா தெரியவில்லை
*****************************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...