திங்கள், அக்டோபர் 25, 2021

தானமிட்டது நானல்லோ

 தீர்க்க சிந்தனை புத்தன் சிலையில்

மூக்கு தீர்க்கமாக இருக்கும்படி அமைத்துவிட்டால்

போதுமாயிருக்கிறது இவ்வுலகுக்கு
அச்சு அசல் புத்தனாம்

**************************************
ஒரு குண்டுமணியளவு குறைந்துவிட்ட துயரத்துக்காக
எத்தனைமுறை விழுந்து கும்பிட்டேன்
நினைத்துப் பார்க்கையில்
உச்சியில் மலை
**************************************************
எப்படியும் எதிர்பார்க்கதான் போகிறாய்
ஆனாலும் ஒரு வீம்பு
ஒன்றும் தெரியாதது போல
எதிர்பார்க்கிறது
தெரிந்த பக்கத்திலும் அதே வீம்பு
பரம்பரை வியாதிக்கு பண்டுவம் சொல்லவும் ஒரு ஆள்

*******************************************************************
கைப்பிடிக்குள் கிடந்த தானியங்களை விசிறிவிட்டதும்
படபடக்கும் இறகுகளோடு
கொத்தியும் பறந்தும் குருவிகளின் அலமலப்பு
யாரும் கவனிக்கவில்லையே
என்றொரு ஆவலாதி
பின்னே
தானமிட்டது நானல்லோ
***********************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...