திங்கள், அக்டோபர் 25, 2021

கையறு சொல்லின் உச்சாடனப் பொழுதுகள்

 என்னென்ன சேர்த்தாய் என்று நானே சொல்லவா

வலி,துரோகம்,
ஆற்றாமை,அழுகை,
துன்பம் எல்லாம் இடித்துப் பிசைந்த ஒற்றை உருண்டை
இலையில் வைத்தபின் எதற்கு யோசனை
அங்காளியின் தொண்டைக்குழி தாங்கும்
போடு திரியை
ஊற்று நெய்யை
******************************************


திருவிழா வந்துவிடும் என்ற நம்பிக்கையோடு சேர்த்த உண்டியல்
கனத்துக்கிடக்கிறது
இன்னொன்று வாங்கச்சொல்லும்
உன் நம்பிக்கையை
நான் விழுந்து கிடக்கும் புதைகுழிக்குள் சற்று வீசுகிறாயா
*************************************************
ஏறு பொழுதில் ஏறிய மலையின்
தெய்வமே
இறங்குபொழுதில்
யாரோடு இறங்கிப் போனாய்
இறங்குபொழுதில்
இறங்கித் தொழவந்த
வனத்தின் நீலியே
உறங்குபாவனையில்
என்னைத் தவிர்க்காதே
வெறியாட்டின் முழக்கமல்ல
உச்சாடனத்திலிருப்பதெல்லாம்
கையறு சொல் **************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...