புதன், செப்டம்பர் 30, 2020

வாழ்வு

 

லேசான வெம்மை

லேசான இருள்

கொதிக்காத நெற்றியைத்
தொட்டுப் பார்த்துவிட்டு
சன்னல் வழி கை நீட்டு

சுட்டுவிரலால் தொட முடிவதுதான் வானம்

சும்மா பரிதவிக்காதே

அவரவர் இருக்கிறார்கள்

அவரவர் பக்கம்

சுட்டுவிரல் நுனி வானத்தைச்
சற்றே உறிஞ்சு

சிறு கீறல் ரத்தத்தை உறிஞ்சுவாயே
அது போல

அவ்வளவுதான்

வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்

 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...