வியாழன், டிசம்பர் 09, 2021

தொடத்தொட

 எங்கோ மழை

இருண்ட திசைநோக்கி
வாரிச்சுருட்டிக்கொண்டு ஓடும் மேகங்கள்
ஆகாயத்தில் கால்கள் பின்னிநிற்க குடைகளை விசிறி ஆடும் நாயகியாக
என்றுதான் துள்ளியிருக்கிறோம்
துப்பட்டாவோ
முந்தானையோ
சடசடத்து இறங்காது காக்க
சலிந்து இறங்கிய சொட்டுகளை
நா நீட்டி சுவைத்தறியா வாழ்வு
ஆவிபிடி அதிகாரங்கள் முடிந்தபிறகாவது
ஒருநாள்
நனைதலுக்கு
ஒதுக்கலாம்
இப்போதைக்கு
தொட்டிச்செடி
துளிர்களின் குளுமையைத்
தொட்டுக்கொண்டு வாழ்வோம் வா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...