ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

சிராத்துண்டு வரலாறு

 யாரோ நாற்காலி பற்றி

எழுதியிருக்கிறார்கள்

நாற்காலி படங்களாகக் காட்டி
என் விருப்பம் கேட்கிறது
இணையம்
இரண்டுபேர் உட்காரத்தக்க
அகலத்தின்
பழகிப்பழகிக் கருத்த
எங்கள் மரநாற்காலி
யார் யாரையோ உட்கார்த்தி
இறுதிப்பயணம் போன வரலாறு
ஒருநாள்
அடுப்பெரிக்கும் சிராத்துண்டாகி
முடிந்தபோது
அவ்வளவு மழமழப்பும்
உடையுமா எரியுமா
என வியந்த எங்கள் விழிகளுக்குள்
இவ்வளவு ஆண்டும்
உறுத்திக் கொண்டிருப்பது
இன்றுதான் தெரிகிறது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...