ஞாயிறு, அக்டோபர் 16, 2011

சென்னைப் பூ 

அடுக்ககத்தின் 
தொட்டிரோஜா 
மல்லி ,சாமந்தி 
மட்டுமே தெரியுமென்றாள்
அமலா..
பவழமல்லி,செண்பகம் ,
மகிழம்பூ  காட்ட 
பாண்டிபஜார் கிளம்பினாள்
அம்மா.
குறுஞ்செய்தி பார்த்து 
கேட்ட மகளுக்கு 
தனது  இடைநகரில்
எங்கு காட்டுவதென 
தெரியாத் திகைப்பு 
சித்திக்கு ...     

வெள்ளி, அக்டோபர் 14, 2011

யாருக்காக....

வினோத வகைகளோடு
பார்த்துப் பார்த்து 
பதார்த்தப்பட்டியல் 

எதிரொலிக்கும் அரங்கிலும் 
இசைநிகழ்ச்சி கட்டாயம்
குதிரையோ ,யானையோ
ஊர்வலத்துக்கு அவசியம்!
வண்ண விளக்கு
வாணவேடிக்கை 
பன்னீர் யந்திரம் 
பந்தல் புதுமை
பந்தியில் புதுமை
எங்கு பார்த்ததையும்
ஒன்று சேர்ந்தொரு
கனவுத் திட்டத்தில்
கல்யாணம்!

செலவுக்காரன்
கலக்கத்தில்...
வரவுக்காரன்
கணக்கில்..
வந்தவர்
கடமையில்....
வெட்டு ஒன்று !


எப்போதுமே
இடையில்
ஒற்றை இழைக்கோடுதான்
ஆம்-இல்லை  
வேண்டும்-வேண்டாம் 
முடியும்-முடியாது 
நடக்கும்-நடக்காது....


ஆனால் 
கச்சிதமாக வரைய 
கை கூடுவது 
சிலருக்குத்தான்..
நேர் கோடிழுக்க 
நீளாக்கரமுடையார் 
தலை
தஞ்சாவூர் பொம்மை.....

புதன், அக்டோபர் 12, 2011

தப்புத்தாளங்கள் 

வெளியில் நீண்ட 
வேரா ?
அடியைத் தேடும் 
விழுதா?

அடையாளம் 
அறியமுடியாமல் 
படர்ந்திருக்கிறது 
வெறுப்பின் நீட்சி...

முளை விடும்
முன்னரே
கருகிவிடுவதோ
களைஎனக்
கருதிவிடுவதோ
விருப்பின்
தலையெழுத்து...



வறுமைக்கோடு

எப்போதுமே 
உங்களுடையது
ஏட்டுச் சுரைக்காய்தான் ...


ஆனால் ...
அதில்
படமாவது இருந்திருக்கலாம்


முனை முறிந்த
பென்சிலால்
வரைந்தீர்களோ?


ஆனால்...
அதன்
தடமாவது பதிந்திருக்கலாம்


சுருட்டிய தாளுக்குள்
காணவேயில்லையே...

வறுமைக்கோடு


உழைக்கத் தெரியாதவனும்
பிழைக்கத் தெரியாதவனும்
கரைக்கும் அப்பால்
கடக்க முடியாத வெள்ளத்தை
கண்டு கொண்டிருப்பதாக

தொலை நோக்கியால்
உற்றுப்  பார்த்தவர்
உரைத்தார்...

அது
கட்டிய கரையல்ல ...
தேசத் துகிலில்
ஒட்டிய அழுக்கென்று
தொலைநோக்கி
பாவம்...
காட்டவில்லை!

வெள்ளி, அக்டோபர் 07, 2011

இடைவெளி 


புலால் மறுக்க 
புரட்டாசி தேடும் 
உனக்கு 
ஆச்சர்யம்தான்...

தச்சுக் கோளாறோ
பூச்சுக் கோளாறோ
நாற்காலிக்கும்
தரைக்கும் -நடுவே 
நொடிக்கும் இடைவெளியில் 
ஈ ,எறும்பு 
ஏதும் நசுங்காதிருக்க
பிரார்த்தித்தபடியே
அமரும்
அவனைப்பார்த்து ...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...