ஞாயிறு, ஜூன் 26, 2016
என்னை என்னவென்று சொல்லிக்கொள்வது
நெருப்பாக இருக்க முடிவுசெய்கையில்
ஊழிப் பெருமழைக்காலமாகி விடுகிறது
ஊழிப் பெருமழைக்காலமாகி விடுகிறது
பனிப்பாளமாகக் கிடக்கையில்
மேலிருந்து உச்சிவெயில்
கீழிருந்து காட்டுத்தீ
மேலிருந்து உச்சிவெயில்
கீழிருந்து காட்டுத்தீ
சகஹிருதயர்களை அடையாளம் கண்டால்
அவர்களைச் சாவு தின்று விட்டிருக்கிறது
அவர்களைச் சாவு தின்று விட்டிருக்கிறது
தனிமையே தீர்வென்கையில்
நான் நிற்குமிடம் திருவிழாக்கூட்டம்
நான் நிற்குமிடம் திருவிழாக்கூட்டம்
எனை என்னசெய்வாய் வேய்ங்குழலே
சங்கீத ஞானமில்லா வெறும்
ஊதாங்குழலாகிக் கிடக்கும் உன்னிடம்
நிச்சயம் கிடைக்கவேண்டும் விடை
சங்கீத ஞானமில்லா வெறும்
ஊதாங்குழலாகிக் கிடக்கும் உன்னிடம்
நிச்சயம் கிடைக்கவேண்டும் விடை
உள்ளிருக்கும் வெளியில்
செம்மை கூடிய வானவெளியின்
அரிய தருணத்தைச் சிறைப்படுத்தியிருந்த
புகைப்படத்தில் ஒரு கோடுபோல்
தெரிந்தது என்ன பறவையோ
என்றே துடிக்கிறது மனச்சிறகு
அலைபேசி உரையாடலில்
லத்தின் அமெரிக்கப்பாடலை
சிலாகித்துக்கொண்டிருக்கிறார் நண்பர்.
பின்னணியில்
குழந்தைகளின் விளையாடற் கூச்சல்
"டேய் அந்தண்டை போங்க "
தொடர்கிறார் அவர்
லத்தின் அமெரிக்காவிலிருந்து
நான் அந்த முற்றம் இறங்கிவிட்டேன்
என்ன ஆட்டமாயிருக்கும்
ஜம் பம்மென அதிரும் இசைக்குள்
வளைந்து குழையும் ஒரு புல்லாங்குழல் துணுக்கு
சட்டென்று பதிந்து இழைகிறது
எல்லாம் தாண்டி நாள் முழுக்க
பிரம்மாண்டங்களின் ,அதீதங்களின்
ஊர்வலத்தைக் கேலிசெய்தபடி
சிறுகோடுகளின்
படியில் தொங்கும் பயணி எனப்
பரிகசிக்கிறாள் தோழி
_
திண்ணை 16 5 16
மே 15 முகநூலில்
பறத்தல் விடுதலை
என எப்படித் தீர்மானிப்பது
இருத்தல்
அவ்வாறில்லாதபோது
*****************************************வழக்கமான புன்னகை
வழக்கமான சண்டை
வழக்கமான கேள்வி
வழக்கமான பதில்
வழக்கமான பாதை
வழக்கமான பயணம்
வழக்கமான தாமதம்
வழக்கமான காத்திருப்பு
இந்தப்பக்கமா
கன்டெய்னர்கள் வருவதேயில்லை
*************************************************
என எப்படித் தீர்மானிப்பது
இருத்தல்
அவ்வாறில்லாதபோது
*****************************************வழக்கமான புன்னகை
வழக்கமான சண்டை
வழக்கமான கேள்வி
வழக்கமான பதில்
வழக்கமான பாதை
வழக்கமான பயணம்
வழக்கமான தாமதம்
வழக்கமான காத்திருப்பு
இந்தப்பக்கமா
கன்டெய்னர்கள் வருவதேயில்லை
*************************************************
மே 14 முகநூலில்
புல்வெளியில் இலையும்
பூவும் உதிர்வதைச்
சொல்கையில்கூட
உங்களால்
காய்ந்த புல்லைக்
கற்பனையும் செய்ய இயலவில்லை.
எல்லாம்
சிறப்பாக இருக்கிறது
மகிழ்ச்சி
********************************************
எங்கள் கதாநாயகர்கள்தான்
எவ்வளவு துன்புற்று
விட்டார்கள்
நைந்த முந்தானைகள்
நனையும் காலம்வரை
சுபிட்சம்
*************************************************
எங்கிருந்தாவது
ஒரு சுசீலா பாடல்
ஒலித்தால்
யாரோ சூடியிருக்கும்
சாதிமல்லியின் சுகந்தம்
கடந்தால்
மெல்லிய குரலில்
ஒரு பூனை மியாவினால்
களுக்கென ஒரு மழலை
சிரித்தால்
அட
வீறிட்டழுதால் கூடத்தேவலாம்
இந்த நொடி உடைந்துவிடும்
************************************************
கோத்துக் கொள்ள
நீண்ட கரங்கள்
தட்டையாக இருக்கிறதா
பஞ்சு போலிருக்கிறதா
மெல்லியதா
கொடுத்துச் சிவக்குமா
பரஸ்பர பரிசீலனையில்
நடுங்குவதைக் கவனியாது
இப்புறமும் அப்புறமும்
நீண்ட படியே..
******************************************************
பூவும் உதிர்வதைச்
சொல்கையில்கூட
உங்களால்
காய்ந்த புல்லைக்
கற்பனையும் செய்ய இயலவில்லை.
எல்லாம்
சிறப்பாக இருக்கிறது
மகிழ்ச்சி
********************************************
எங்கள் கதாநாயகர்கள்தான்
எவ்வளவு துன்புற்று
விட்டார்கள்
நைந்த முந்தானைகள்
நனையும் காலம்வரை
சுபிட்சம்
*************************************************
எங்கிருந்தாவது
ஒரு சுசீலா பாடல்
ஒலித்தால்
யாரோ சூடியிருக்கும்
சாதிமல்லியின் சுகந்தம்
கடந்தால்
மெல்லிய குரலில்
ஒரு பூனை மியாவினால்
களுக்கென ஒரு மழலை
சிரித்தால்
அட
வீறிட்டழுதால் கூடத்தேவலாம்
இந்த நொடி உடைந்துவிடும்
************************************************
கோத்துக் கொள்ள
நீண்ட கரங்கள்
தட்டையாக இருக்கிறதா
பஞ்சு போலிருக்கிறதா
மெல்லியதா
கொடுத்துச் சிவக்குமா
பரஸ்பர பரிசீலனையில்
நடுங்குவதைக் கவனியாது
இப்புறமும் அப்புறமும்
நீண்ட படியே..
******************************************************
மே 11 முகநூலில்
கரித்துண்டுபோல் கிடந்தன
எழுத்துகள்
தணலாக்க முடிகிறது உன்னால்
சொல்சொல் எனச்சொன்னதல்லோ
பிழை
*****************************************************
புரிஞ்சுதா புரிஞ்சுதா என்பார் பெரியப்பா
ஒவ்வொரு வரிக்கு நடுவிலும்
மொத்தமாகவே புரியவில்லை
எனச்சொல்லும் தைரியம் வந்தபோது
அவருக்கு எதுவும் புரியும் நிலையில்லை
*****************************************************************
கவனிக்காதது அலட்சியம் என்பாய்
கடந்து செல்வது திமிர் என்பாய்
நின்றால் எதிர்பார்ப்பு
நெருங்கினால் ஏக்கம்
விலகினால் எரிச்சல்
எங்கிருந்தால் இயல்பு
********************************************************
வந்திருக்கவேண்டும் மழை
வாசல் திறந்திருந்தபோதே
குழந்தை விழித்திருந்தபோதே
மூடிய கதவுக்கு வெளியே
இப்போது
வெறும் சலசலப்பு
*********************************************************
எழுத்துகள்
தணலாக்க முடிகிறது உன்னால்
சொல்சொல் எனச்சொன்னதல்லோ
பிழை
*****************************************************
புரிஞ்சுதா புரிஞ்சுதா என்பார் பெரியப்பா
ஒவ்வொரு வரிக்கு நடுவிலும்
மொத்தமாகவே புரியவில்லை
எனச்சொல்லும் தைரியம் வந்தபோது
அவருக்கு எதுவும் புரியும் நிலையில்லை
*****************************************************************
கவனிக்காதது அலட்சியம் என்பாய்
கடந்து செல்வது திமிர் என்பாய்
நின்றால் எதிர்பார்ப்பு
நெருங்கினால் ஏக்கம்
விலகினால் எரிச்சல்
எங்கிருந்தால் இயல்பு
********************************************************
வந்திருக்கவேண்டும் மழை
வாசல் திறந்திருந்தபோதே
குழந்தை விழித்திருந்தபோதே
மூடிய கதவுக்கு வெளியே
இப்போது
வெறும் சலசலப்பு
*********************************************************
ஒளி உறுத்தும்போது
இருள் பிடிக்கிறது
தெரியும்
இருளும் உறுத்தும்
இருள் பிடிக்கிறது
தெரியும்
இருளும் உறுத்தும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மயில் நீலச்சேலை. டிசைனர் ரவிக்கை, பொருத்தமாய்த்தேடிவாங்கிய அணிகலன்கள் , செருகிய பூச்சரமும் ஒப்பனைப்பூச்சுகளும் ... பொருத்தம...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...




